யமுனாச்சாரியர்
பத்தினை அறிய
ஒன்பதினை அறிதல் அவசியம்.
என் அத்தனை அறிய அவனுக்கு
முன்வந்த மகானுபாவர்களை
அறிதல் அவசியம்.
அன்று வைணவம்
பூத்துக் குலுங்கிய தோட்டமாயில்லை.
அதிரடியாய் நடந்த
அத்வைதப் போரினால்
வாட்டமாயிருந்தது.
யதிராஜன் அவதாரம் நிகழ்வதற்கு
முன்னூறு ஆண்டுகள் முன்
சீறிச் சினந்த அத்வைத பேராழி,
ஆழ்வார்கள் போட்டிருந்த
பக்திப் பாதையை
அடித்துச் சென்றிருந்தது.
அந்த நேரத்தில்
தான்
மதுரையம்பதியில்
அந்த
அதிசயம்
நிகழ்ந்தது.
ஆச்சாரியனுக்கு
ஆச்சாரியன்
யமுனைத்துறைவனின்
பிறப்பு
நிகழ்ந்தது.
இந்தப் பெயர்
பலருக்கு
அறிமுகம்
இல்லாமல் இருக்கலாம்.
அவனது இன்னொரு
பெயர்
உலகம் அறிந்தது.
அனைவருக்கும்
தெரிந்தது.
அது தான்
ஆளவந்தார்.
வைணவத்தை
ஆளப்போகிறவரை
ஆளவந்தார்.
இராமானுசன்
என்னும்
வைணவச்
சூரியனுக்கு
ஆரியன்.
நம்மாழ்வாரின்
பாசுரங்களுக்கு
இசை வடிவம் தந்த
நாதமுனியின்
பெயரன்.
நான்மறையும்
கற்றுணர்ந்த உயரன்.
மணக்கால்
நம்பியின்
நம்பிக்கைக்குப்
பாத்திரமானவன்
பிறப்பிலே
தந்தையை இழந்தார்.
தாயிடம்
வளர்ந்தார்.
ஐந்து வயதில்
குருகுலம் அடைந்தார்.
தன் அறிவாலும்
அன்பாலும் பண்பாலும்
குருவின்
அன்புக்கு உற்றவரானார்.
நான்மறைகளையும்
கற்றவரானார்.
அப்படிப்பட்ட ஒரு
நாளில் தான்
உலகுக்கு அவர்
பெருமையை
அறிவிக்குக்
கூடிய ஒரு
சம்பவம் நடந்தது.
No comments:
Post a Comment